ஊடகவியலாளர் பிரதீப் எக்னிலிகொட மனைவி சந்தியா எக்னிலிகொடவை நீதிமன்ற வளாகத்தில் வைத்து அச்சுறுத்தியமை மற்றும் நீதிமன்ற செயல்பாடுகளுக்கு இடையூறு விளைவித்தார் என்ற குற்றச்சாட்டின் கீழ் விளக்கமறியலில் வைக்கப்பட்டு பிணையில் விடுதலையான பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் அரசாங்கத்திடன் புதிய கோரிக்கை ஒன்றை முன்வைத்துள்ளார்.

‘பௌத்தர்களின் தலைவர்களாக செயற்படும் ஒவ்வொரு தலைவர்களிடம் நான் ஒரு தாழ்மையான வேண்டுகோளை விடுக்கின்றேன். இந்நாட்டின் தற்போது நடைமுறையில் உள்ள நீதி தொடர்பில் பிக்குகள் தெளிவை பெற்றுகொள்ள பாடசாலை கல்வித் திட்டத்திலாலது அல்லது பல்கலைக்கழக கல்வித் திட்டத்திலாவது  உள்வாங்கப்பட வேண்டும்.

நான் சிறைச்சாலைக்கு சென்று வந்ததை ஒரு படிப்பினையாக கொண்டு  அநீதிகளுக்கு எதிராக தொடர்ந்து குரல் எழுப்புவேன் என்றார்.

By vanni

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *