நடைபெற்று முடிந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலில், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பாக, நாடளாவிய ரீதியில் தெரிவான உறுப்பினர்களின் சத்தியப் பிரமாண நிகழ்வு, கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் தலைமையில், நேற்று (11) திருகோணமலை, ஜேகப் பார்க் ஹோட்டலில் இடம்பெற்றது.

