பிரதான செய்திகள்

மஹிந்தவுக்கும் ,சந்திரிக்காவுக்கும் அழைப்பு கொடுத்த மைத்திரி

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மே தினக் கூட்டத்துக்கு வருகை தருமாறு முன்னாள் ஜனாதிபதிகளான மஹிந்த ராஜபக்ஷவுக்கும், சந்திரிக்காவுக்கும் அழைப்புகள் விடுக்கப்பட்டுள்ளதாக மத்திய மாகாண முதலமைச்சர் சரத் ஏக்கநாயக்க தெரிவித்துள்ளார்.

கண்டி கெட்டம்பே மைதானத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் மே தினக் கூட்டம் நடைபெறவுள்ளது.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், தொழிற்சங்கவாதிகள், ஆதரவாளர்கள் உட்பட பெருந்திரளானோர் கலந்துகொள்ளவுள்ளதாகவும் அமைச்சர் கூறியுள்ளார்.

இந்தக் கூட்டத்துக்கு வரும் மக்களுக்காக சுமார் ஆயிரம் பஸ்கள் சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, மக்களுக்கான போதியளவு குடிதண்ணீர், கழிவறைகள் போன்றவை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் கண்டி மகளிர் உயர்கல்லூரியின் முன் ஆரம்பமாகவுள்ள பேரணியில் இலட்சக்கணக்கான மக்கள் கலந்துகொள்வார்கள் எனவும் மத்திய மாகாண முதலமைச்சர் சரத் ஏக்கநாயக்க மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts

மாற்றாற்றல் உடையோருக்கான விளையாட்டு போட்டி மன்னாரில்

wpengine

“நான் திருமணம் செய்து கொண்டால் விளக்கும் கோரி நிதி மோசடி விசாரணைப் பிரிவு என்னை அழைக்கும்”

wpengine

வவுனியா போக்குவரத்து சாலையில் டீசல் திருட்டு! புலனாய்வு விசாரணை

wpengine