உலகச் செய்திகள்பிரதான செய்திகள்

ஜாகிர் நாயக்கிற்கு எதிராக பிடிவாரன்ட்

பண மோசடி வழக்கில் மத போதகர் ஜாகிர் நாயக்கிற்கு எதிராக பிடிவாரன்ட் பிறப்பித்து மும்பை சிறப்பு கோர்ட் உத்தரவிட்டுள்ளது.


சர்ச்சைக்குரிய மத போதகர் ஜாகிர் நாயக் மீதான பண மோசடி வழக்கு தொடர்பாக அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வழக்கில் நேரில் ஆஜராகி விளக்கமளிக்க உத்தரவிட்டும் அவர் ஆஜராகவில்லை.

இதனையடுத்து ஜாகிர் நாயக்கிடம் பண மோசடி குறித்து விசாரணை நடத்த வேண்டும் அவருக்கு எதிராக ஜாமினில் வெளிவர முடியாத பிடிவாரன்ட் பிறப்பிக்க வேண்டும் என மும்பையில் உள்ள சிறப்பு கோர்ட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் மனு தாக்கல் செய்தனர்.

இதனை ஏற்றுக்கொண்டு ஜாகிர் நாயக்கிற்கு எதிராக ஜாமினில் வெளிவர முடியாத பிடிவாரன்ட் பிறப்பித்து கோர்ட் உத்தரவிட்டுள்ளது.

Related posts

முசலி பிரதேச வாழ்வாதாரத்தில் இடம்பெற்ற ஊழல் மோசடி! ஊழல் லஞ்ச ஆணைக்குழுவில் முறைப்பாடு (விடியோ)

wpengine

முரண்பட்டாலும் ஜனாதிபதியும்,பிரதமரும் பிரச்சினைக்கு தீர்வுகளை பெற்றுத்தருவார்கள் மன்னாரில் அமைச்சர் ஹக்கீம்

wpengine

ஈஸ்டர் தாக்குதல்! நீதி கோரி வத்திக்கானில் புனித ஆராதனை

wpengine