பிரதான செய்திகள்

நல்லாட்சி அரசு என்பது வெறும் வாய்ப்பேச்சில் மாத்திரமே! வடமாகாண அமைச்சர் டெனிஸ்வரன்

கடந்த 8 நாட்களாக கேப்பாபுலவு மக்கள் தமது சொந்த காணிகளை விடுவிக்குமாறுகோரி அகிம்சை வழியில் தொடர்ந்து போராடி வருகின்றனர். பிலாக்குடியிருப்பு பகுதி மற்றும் புதுக்குடிருப்பு பிரதேச செயலகம் முன்னால் வயது வித்தியாசம் இன்றி சிறுவர்கள், மாணவர்கள் முதல் முதியவர்கள் வரை ஆண்கள், பெண்கள் என இராப்பகலாக கொட்டும் பனியிலும் தமது உரிமைக்காக தொடர்ந்து போராடிவரும் மக்களை சந்தித்தார் அமைச்சர் பா.டெனிஸ்வரன்.

மேலும் அவர் அங்கு கருத்து தெரிவிக்கையில்,

நல்லாட்சி அரசு என்பது வெறும் வாய்ப்பேச்சில் மாத்திரம் இருந்துவிடாமல் தமது செயற்பாடுகளிலும் அதனை நிருபிக்கவேண்டும். மக்கள் தமது காணிகளுக்கான ஆவணங்களை தம்மோடு வைத்துள்ளனர், அவர்கள் தங்கள் பூர்வீக வாழ்விடங்களை தரும்படி கேட்பது அவர்களது அடிப்படை உரிமை, அவ்வாறு அவர்களை தமது சொந்த காணிகளுக்கு செல்வதற்கும் குடியிருப்பதற்கும் அனுமத்திக்காமல் இருப்பதானது அடிப்படை உரிமை மீறலாகும், எங்கே உரிமைகள் மறுக்கப்படுகின்றதோ அங்கே புரட்சிகளும், போராட்டங்களும் வெடிப்பது தவிர்க்கமுடியாதது என்பதனை எமது கடந்த கால அனுபவங்களின் மூலம் கண்டிருக்கின்றோம்.

எனவே உரிய தரப்பினர் காலம் தாழ்த்தாது விரைந்து காணிகளை மீள வழங்குவது காலத்தின் கட்டாயம் என்பதனை வலியுறித்தியததோடு, படையினரின் தேவைக்கு போதியளவு அரச காணிகள் இருக்கும்போது, மக்களது காணிகளை ஆக்கிரமித்திருப்பது யாராலும் நியாயப்படுத்தவோ ஏற்றுக்கொள்ளவோ முடியாது எனவும், வடமாகாணத்தில் விடுவிக்கப்படாத அனைத்து காணிகளையும் விரைவில் விடுவிக்க வேண்டுமெனவும், எமது மக்கள் தங்கள் நிலங்களுக்கு திரும்பாமல் இன்னும் அகதி வாழ்க்கை வாழ்ந்துகொண்டிருப்பது மன வேதனை அளிப்பதாகவும் தெரிவித்தார்.

Related posts

14 வயது சிறுமியினை பாலியல் துஷ்பிரயோகம் செய்த ரஷ்யா படை வீரர்கள்

wpengine

ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் உறுப்பினர்கள் சத்தியப் பிரமாணம்.

Maash

குடும்பப் பெண்ணுடன் தர்க்கம் செய்த முகாமையாளர்,உதவி முகாமையாளர்

wpengine