உலகச் செய்திகள்பிரதான செய்திகள்

ஜாகீர் நாயக்கின் அமைப்புக்கு இந்திய மத்திய அரசு 5 வருட தடை விதிப்பு

பிரபல இஸ்லாமிய மதபோதகர் ஜாகீர் நாயக்கின் அமைப்புக்கு இந்திய மத்திய அரசு 5 வருடங்கள் தடை விதித்துள்ளது.

ஜாகிர் நாயக்கின் பேச்சால் தீவிரவாத தாக்குதலுக்கு பங்களாளதேஷ் முஸ்லிம்கள் தூண்டப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. எனவே ஜாகிர் நாயக்கின் பேச்சை ஆய்வு செய்யுமாறு இந்தியாவை பங்களாளதேஷ் அரசு கேட்டுக் கொண்டது.

பங்களாளதேஷத்தில் ஒளிபரப்பாகும் அவருக்குச் சொந்தமான “பீஸ் டிவி´க்கு அந்நாட்டு அரசு தடை விதித்தது.

இந்நிலையில், பிரபல இஸ்லாமிய மதபோதகர் ஜாகிர் நாயக்கின் இஸ்லாமிய ஆராய்ச்சி அறக்கட்டளை என்ற அமைப்புக்கு மத்திய அரசு 5 வருடங்கள் தடை விதித்துள்ளது.

நேற்று நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது.

இந்தியாவின் பன்முகத் தன்மைக்கு எதிராக அவரின் பேச்சுக்கள் இருப்பதற்காக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

ராஜபக்ச சுமத்தியுள்ள குற்றச்சாட்டு முற்றிலும் பொய்யானது

wpengine

அரசாங்க எதிர்ப்பு பேரணியின் எதிரொலி : பாரிய போக்குவரத்து நெரிசல்!

wpengine

அமைச்சர் ஹக்கீமிடம் விளக்கம் கோரிய உலமா சபை

wpengine