பிரதான செய்திகள்

புத்தளம் குவைத் வைத்தியசாலையின் ஏற்பாட்டில் ஓட்டமாவடியில் பரிசோதனை முகாம்

(அனா)
கண்னில் வெள்ளை படர்தல் நோய் உள்ளவர்களுக்கு கண் வில்லை பொருத்துவதற்காக அவர்களை பரிசோதிக்கும் கண் பரிசோதனை மருத்துவ முகாம் நேற்று ஞாயிற்றுக்கிழமை ஓட்டமாவடி தியாவட்டுவான் கிராம சேவகர் பிரிவில் “மரியம் கிராமத்தில்” இடம்பெற்றது.


புத்தளம் குவைத் வைத்தியசாலையின் அனுசரனையில் இடம்பெற்ற கண் பரிசோதனை முகாமில் குவைத் வைத்தியசாலையின் வைத்திய நிபுனர்கள் கலந்து கொண்டு கண்னில் வெள்ளை படர்தல் நோயினால் பாதிக்கப்பட்ட நோயாளர்களை பரிசோதனை செய்தனர்.unnamed

கண்னில் வெள்ளை படர்தல் நோய் உள்ள அறுபத்தைந்து பேர் பரிசோதனை செய்யப்பட்ட போதும் இவர்களில் இருந்து இருபத்திநாலு பேருக்கு கண் வில்லை பொருத்துவதற்கு தெரிவு செய்யப்பட்டுள்ளதாகவும் இவர்களுக்கான கண் வில்லைகள் இரண்டு வாரத்தில் புத்தளம் குவைத் வைத்தியசாலையில் இலவசமாக பொருத்தப்படும் என்று ஏற்பாட்டாளர் மௌலவி ஏ.நஜீம் மேலும் தெரிவித்தார்.unnamed-2

Related posts

ஹக்கீம் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்! பொன்சேகா இணைய வேண்டும்.

wpengine

சட்டவிரோத மணல் குவிப்பு! முல்லைத்தீவு அருட்தந்தை கைது

wpengine

றிஷாதை இகழ ஹக்கீமின் அங்கீகாரத்துடன் ஒரு அணி களமிறக்கம் பல இணையதளம்,முகநுால்

wpengine