பிரதான செய்திகள்

Update அதிகாலை யானை தாக்குதல் மீண்டும் ஒரு சிறுமி மரணம்

புத்தளம் – அநுராதபுரம் வீதியின் மீஒயா பாலத்திற்கு அருகில் காட்டு யானை தாக்குதலுக்கு உள்ளாகி காயமடைந்து கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த 5 வயது குழந்தை உயிரிழந்துள்ளது.


இன்று அதிகாலை 2.20 அளவில், சிற்றூர்தி ஒன்றில் பயணித்துக்கொண்டிருந்தவர்கள் மீது
இவ்வாறு காட்டு யானை தாக்குதல் இடம்பெற்றுள்ளது.

இதில் 11 பேர் காயமடைந்து புத்தளம் மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் 1 உயிரிழந்து இருந்தார். இந் நிலையில் இந்த காட்டு யானை தாக்குதலில் தற்போது இந்த குழந்தையுடன் சேர்த்து இருவர் உயிரிழந்துள்ளனர்.

அவர்கள் இன்று காலை கட்டுநாயக்க விமானநிலையத்திற்கு வந்து கொண்டிருந்த போதே இந்த தாக்குதல் சம்பவத்திற்கு முகம் கொடுத்துள்ளனர்.

Related posts

ராஜபக்சர்களின் மற்றுமொரு மோசடி விரைவில்! அம்பலப்படுத்தப்பட உள்ள ஜனாதிபதி.

Maash

முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் உச்ச நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மீறல் மனு!

wpengine

தெல்தெனிய சம்பவம் பொலிஸாரின் செயற்பாடு தொடர்பிலும் சந்தேகம் மஹிந்த

wpengine