பிரதான செய்திகள்

பாராளுமன்ற உறுப்பினர் சனத் நிஷாந்த நீக்கம்

பாராளுமன்ற உறுப்பினர் சனத் நிஷாந்த, ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் உறுப்புரிமையில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

நேற்று (04) இடம்பெற்ற ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி மத்திய செயற்குழு கூட்டத்தில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் மஹிந்த அமரவீர கூறினார்.

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி தொடர்பில் அண்மைக் காலங்களில் அவர் வெளியிட்டு வந்த கருத்துக்கள் குறித்து ஆராய்ந்த பின் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக அமைச்சர் மஹிந்த அமரவீர கூறினார்.

இது தவிர ஒழுக்கத்தை மீறி செயற்பட்ட ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மேலும் சில உறுப்பினர்கள் சம்பந்தமாகன தகவல்கள் குறித்தும் விசாரிப்பதற்கு ஒழுக்காற்று குழுவிற்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் மேலும் கூறினார்.

Related posts

பேஸ்புக் பதிவில் கஞ்சா சேனை படம்

wpengine

கல்வி நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்ட பின்னர் பெற்றோர் கவனம் செலுத்த வேண்டிய

wpengine

இனப்பிரச்சினைக்கான தீர்வு மேசையில் ஹக்கீம் இருப்பது முஸ்லிம்களுக்கு பாரிய ஆபத்தானதாகும்

wpengine