உலகச் செய்திகள்பிரதான செய்திகள்

பிரபல கவாலி பாடகர் அம்ஜத் சப்ரி மீது துப்பாக்கி சுடு

பாகிஸ்தானின் சப்ரி சகோதர்கள் குழுமத்தை சேர்ந்த பிரபல கவாலி பாடகரான அம்ஜத் சப்ரி (வயது 45), இன்று பிற்பகல் கராச்சியில் உள்ள லியாகுவாதாபாத் பகுதியில் காரில் சென்று கொண்டிருந்தார்.

அப்போது, அம்ஜத் சப்ரியின் கார் மீது இரு சக்கர வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத இரண்டு நபர்கள் சரமாரியாக துப்பாக்கியால் சுட்டுள்ளனர். இதில், அம்ஜத் சப்ரி படுகாயம் அடைந்தார்.

இதையடுத்து உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அம்ஜத் சப்ரி அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

சப்ரி சகோதரர்கள் குழுமம் குலாம் பரித் சப்ரி மற்றும் அவரது இளைய சகோதர் ஹாஜி மக்பூல் அகமது சப்ரி ஆகியோரால் துவங்கப்பட்டது. குலாம் சப்ரியின் மகன் அம்ஜத் சப்ரி ஆவார்.shoot_3

Related posts

கல்குடாவில் ஒற்றுமைப்பட்ட சமூகமாக, ஊரோடு ஒத்தோடுகின்ற அனைவரும் செயற்பட வேண்டும்

wpengine

உப்பாற்றுப்பகுதியில் வாழும் மக்களின் மீன்பிடி,விவசாய செய்கை மறுக்கப்படுகின்றது அமைச்சர் றிஷாட்! ஜயவிக்ரம அமைச்சரிடம்

wpengine

வீடுகளுக்கும் வர்த்தக நிலையங்களுக்கும் பாரதூரமான சேதங்களையும் ஏற்படுத்தினார்கள்

wpengine