பிரதான செய்திகள்

ஜப்பான் நாட்டிலும் மஹிந்த ஆசி வேண்டினார்

ஜப்பானுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ, சவரா லங்கா ஜி விகாரையில் நேற்று வழிபாடுகளில் ஈடுபட்டார்.

ஜப்பானிலுள்ள இலங்கையர்களின் அழைப்பினை ஏற்று 6 நாட்கள் விஜயம் மேற்கொண்டு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ உள்ளிட்ட குழுவினர் நேற்றுமுன் தினம் ஜப்பானுக்குச் சென்றனர்.

ஜப்பானின் பிரதான சங்க நாயக்கர் பானகல உபதிஸ்ஸ தேரர் உள்ளிட்ட மகா சங்கத்தினர் முன்னாள் ஜனாதிபதிக்கு ஆசி வழங்கினர்.

பாராளுமன்ற உறுப்பினர்களான விமல் வீரவங்ஸ, பிரசன்ன ரணதுங்க, ரோஹித அபேகுணவர்த்தன, ஜானக வக்கும்புர, லொஹான் ரத்வத்த, ரோஷான் ரணசிங்க, தெஹிவளை – கல்கிசை மேயர் தனசிறி அமரதுங்க உள்ளிட்ட குழுவினர் முன்னாள் ஜனாதிபதியுடன் இந்த விஜயத்தில் ஈடுபட்டுள்ளனர்.

Related posts

யாழில் மக்கள் கவனத்தை ஈர்த்த மாட்டுவண்டி பவனி!

Maash

மியன்மார் அரசாங்கத்திற்கு எதிராக மீராவோடை ஜூம்ஆ பள்ளிவாயலினால் கண்டனப் பேரணி

wpengine

இஸ்ரேல் இராணுவத்தின் தாக்குதல் சிறுவர் 16பேர் உயிரிழப்பு

wpengine