செய்திகள்பிரதான செய்திகள்

முச்சக்கரவண்டியினுள் வைத்து ஒருவர் வெட்டிக் கொலை..!

இரத்தினபுரியில் கிரிஎல்ல பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கொட்டபெத்தாவ பிரதேசத்தில் முச்சக்கரவண்டியினுள் வைத்து ஒருவர் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளதாக கிரிஎல்ல பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த கொலை சம்பவம் இன்று புதன்கிழமை (18) அதிகாலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கொலை செய்யப்பட்டவர் தொடர்பில் இதுவரை எந்தவித தகவல்களும் கிடைக்கவில்லை என பொலிஸார் தெரிவித்தனர்.

கொலைக்கான காரணம் இதுவரை கண்டறிப்படவில்லை எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் தொடர்பில் சந்தேக நபர்கள் எவரும் இதுவரை கைதுசெய்யப்படவில்லை என பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கிரிஎல்ல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts

அவுஸ்திரேலிய சுற்றுலாப் பயணியிடம் இலஞ்சம் கோரிய பொலிஸ் உத்தியோகத்தர்கள் மூவருக்கு விளக்கமறியல்..!

Maash

வன சரணாலய வர்த்தமானிப் பிரகடனத்தை வாபஸ் பெற உதவுங்கள் பெரேரா ,றிஷாட் வங்காலை மக்கள் கோரிக்கை.

wpengine

இடைக்கால அறிக்கை தொடர்பான தமிழ் மக்கள் பேரவையின் நிலைப்பாடு

wpengine