உலகச் செய்திகள்வெளிநாட்டு செய்திகள்

இஸ்ரேல் மீது ஈரான் தொடர்ச்சியாக ஏவுகணை தாக்குதல்.!

இஸ்ரேல் மீது ஈரான் தொடர்ச்சியாக ஏவுகணை தாக்குதல்களை மேற்கொண்டுள்ளதாக சர்வதேச தகவல்கள் தெரிவிக்கின்ற நிலையில் இரு நாடுகளுக்கும் இடையிலான தாக்குதல்கள் உலக நாடுகளை அச்சம் கொள்ள வைத்துள்ளது.

இந் நிலையில் இரண்டு இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டுள்ளனர் மேலும் 20 இஸ்ரேலியர்கள் காயமடைந்துள்ளனர் என இஸ்ரேலின் அவசரசேவை தெரிவித்துள்ளது.

274 உயிர்களை பலிகொண்ட ஏர் இந்தியா விமான விபத்து; அடுத்த மாதமே ராஜினாமா; விமானி தந்தைக்கு கொடுத்த வாக்குறுதி
274 உயிர்களை பலிகொண்ட ஏர் இந்தியா விமான விபத்து; அடுத்த மாதமே ராஜினாமா; விமானி தந்தைக்கு கொடுத்த வாக்குறுதி

ஈரான் விமானப் படை தளபதி உயிரிழப்பு

சைரன் எச்சரிக்கைக்கு பின்னர் துணைமருத்துவ குழுவினர் ரொக்கட் தாக்குதல் இடம்பெற்ற பகுதிக்கு அனுப்பப்பட்டனர்,பத்துபேருக்கு காயங்கள் ஏற்பட்டுள்ளன என இஸ்ரேலின் அவசரசேவை தெரிவித்துள்ளது.

லண்டனில் மரணமான மனைவியின் ஆசையை நிறைவேற்ற இந்தியா சென்ற கணவனுக்கு நேர்ந்த துயரம்
லண்டனில் மரணமான மனைவியின் ஆசையை நிறைவேற்ற இந்தியா சென்ற கணவனுக்கு நேர்ந்த துயரம்

இஸ்ரேலிய தலைநகரிலிருந்து ரிசோன் லெசியோன் என்ற பகுதியில் வீடுகளை இலக்கு வைத்து ஈரான் ஏவுகணைகள் தாக்கியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை ஈரான் நாட்டின் ஐ,.ஆர்.ஜீ.சி இராணுவ வான்பரப்புக்கு பொறுப்பான விமானப் படை தளபதி அமீர் அலி ஹஜிஸத் இஸ்ரேல் தாக்குதலில் கொல்லப்பட்டுள்ளதாக இஸ்ரேல் அறிவித்துள்ளது.

இஸ்ரேலின் பைட்டர் ஜெட் விமானங்கள் நடத்திய தாக்குதலில் பதுங்குகுழிகள் இலக்கு வைக்கப்பட்டதாகவும் அதனால் மேலும் இரண்டு உயர் அதிகாரிகள் கொல்லப்பட்டனர் எனவும் இஸ்ரேல் தெரிவித்துள்ளது.

Related posts

டிரம்ப் நிர்வாகம் விடுத்த செய்தி அமெரிக்கா மக்களுக்கு

wpengine

ஜேர்மன் முஸ்லிம்கள் மீது தாக்குதல் நடத்த திட்டம்

wpengine

கிரீன்லாந்தை அடைய நினைக்கும் டிரம்ப், விட்டுக்கொடுக்காமல் மக்கள் போராட்டம் .

Maash