செய்திகள்பிரதான செய்திகள்

காங்கேசன்துறை வந்த பயணிகள் கப்பலில் போதைப்பொருள் கடத்தி வந்த இந்தியர் கைது .

நாகபட்டினத்தில் இருந்து காங்கேசன்துறை வந்த பயணிகள் கப்பலில் போதைப்பொருள் கடத்தி வந்த ஒருவர் சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.

நாகபட்டினத்தில் இருந்து வருகை தந்த சென்னையைச் சேர்ந்த பயணி ஒருவர் 4 கிலோகிராம் குஷ் ரக போதைப்பொருளை சூட்சுமமாக உடமையில் மறைத்து எடுத்து வந்துள்ளார்.

சோதனையில் சுங்க அதிகாரிகள் அதனைக் கண்டுபிடித்துக் கைப்பற்றினர்.

போதைப்பொருளைக் கடத்தி வந்தவரைக் கைது செய்த சுங்கத் திணைக்களத்தினர், மேலதிக சட்ட நடவடிக்கைக்காக அவரைக் காங்கேசன்துறை பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.  

Related posts

ரூபா வீழ்ச்சி! கடும் பொருளாதார நெருக்கடி

wpengine

இரசாயன உரம் அரசாங்கத்திற்கு மற்றமொரு தோல்வி – முக்கிய தடையை நீக்கியதாக அறிவிப்பு

wpengine

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்! நபரொருவர் சிகிச்சைப் பெற்றுவந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.

wpengine