செய்திகள்பிரதான செய்திகள்

ஈஸ்டர் தாக்குதல் விவகாரம் – பத்து பெண்கள் இரு ஆண்கள் விடுதலை .

கடந்த 2019ஆம் ஆண்டு  நாட்டில் இடம்பெற்ற ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்களுடன் தொடர்புடைய பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு உதவியதாகவும், உடந்தையாக இருந்ததாகவும் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட பத்து பெண்கள் மற்றும் இரண்டு ஆண்கள் இன்று சட்டமா அதிபரின் ஆலோசனையின் பேரில் விடுவிக்கப்பட்டனர்.

பயங்கரவாத புலனாய்வுப் பிரிவு (TID) அவர்கள் மீது சுமத்தப்பட்டதாகக் கூறப்படும் தொடர்புகள் தொடர்பான விசாரணைகள் முடிவடைந்துள்ளதாக நீதிமன்றத்திற்குத் தெரிவித்ததை அடுத்து, கொழும்பு கூடுதல் நீதவான் பசன் அமரசிங்க அவர்களை விடுதலை செய்ய உத்தரவிட்டார்.

வழக்கு கோப்பை மறுஆய்வு செய்த பின்னர், ஏப்ரல் 9 அன்று சட்டமா அதிபர் அவர்களுக்கு எதிராக மேலும் எந்த சட்ட நடவடிக்கையும் எடுக்க வேண்டாம் என்று அறிவுறுத்தினார். 

இந்த அறிவுறுத்தல்களின் பேரில், பன்னிரண்டு நபர்களையும் விடுவிக்க அரசு தரப்பு நடவடிக்கை எடுத்ததாக தெரிவிக்கப்படுகிறது.

Related posts

கைத்தொழில் வர்த்தக அமைச்சின் கீழான தேசிய அருங்கலைப் பேரவை அங்குரார்ப்பண நிகழ்வில் அமைச்சர் றிஷாட் பங்கேற்பு

wpengine

ஜீ.எஸ்.பி +இற்கு இரையாகப் போகும் முஸ்லிம்கள்

wpengine

காணி மோசடி! வாழைச்சேனை பிரதேச செயலாளருக்கு மகஜர் கையளிப்பு

wpengine