செய்திகள்பிரதான செய்திகள்பிராந்திய செய்திமன்னார்

2லட்சம் பெறுமதியான தொலைபேசி கேபிள்களுடன் மன்னாரில் இருவர் கைது..!

மன்னார் பொலிஸ் நிலையத்தில் வழங்கப்பட்ட முறைப்பாட்டுக்கு அமைய பத்தாம் திகதி மன்னார் ஜிம்ரோ நகர் பகுதியில் 2லட்சம் ரூபாய் மதிப்புள்ள 17 கிலோ 200 கிராம் செப்பு கம்பி மற்றும் தொலைபேசி கேபிள்களுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட இருவரும் 19 வயதுடையவர்கள் என்று  தெரியவருகிறது.

மாவட்ட குற்ற தடுப்பு புலனாய்வு பிரிவு பொறுப்பதிகாரி உ.பொ.ப மதுரங்க தலைமையிலான  அதிகாரிகள் குறித்த சந்தேக நபர்களை கைது செய்துள்ளனர்.

இந்நிலையில் மன்னார்  மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்  சந்திரபால   வின் உத்தரவுக்கு அமைவாக விசாரணைகள் நடத்தப்பட்டு  வருவதாக தெரிய வருகின்றது.

Related posts

2020 இற்குள் 15,000 கிராமங்களின் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி திட்டம்

wpengine

இலங்கையை இஸ்லாமிய இராச்சியமாக மாற்ற முயற்சிகளை மேற்கொண்ட பலர் இன்று அரசாங்கத்துடன்.

Maash

இனவாதத்தை ஒழிக்க! றிஷாட்டின் கரத்தை பலப்படுத்த அரசியல்வாதிகள் முன்வர வேண்டும்.

wpengine