அறிவித்தல்கள்செய்திகள்பிரதான செய்திகள்பிராந்திய செய்தி

வடக்கில் காணிகள் 3 மாதங்களுக்குள் உரிமை கோராவிட்டால், அரச காணிகளாக பிரகடனம்.

வடக்கு மாகாணத்தில் மொத்தமாக 5,940 ஏக்கர் காணிகள் 3 மாதங்களுக்குள் ஒருவரும் உரிமை கோராவிட்டால், அரச காணிகளாக பிரகடனப்படுத்தப்படும் என்று 28.03.2025 திகதியிட்ட 2430 இலக்கமிட்ட வர்த்தமானியில் (ஆங்கிலம் மற்றும் சிங்களத்தில் மட்டும்) காணி நிர்ணய கட்டளைச் சட்டத்தின் 4ஆம் பிரிவின் கீழ் பிரசுரமாகியுள்ளது. 

உரிமை கோருகிறவர்கள் உடனடியாக சட்ட உதவியோடு உங்கள் கோரிக்கைகளை முன் வைப்பதற்கு ஏதுவாக எமது சட்டத்தரணிகள் குழாம் நாளை (02 மே 2025) இலிருந்து தயாராக இருப்பார்கள். 

சுமந்திரன் (முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்)

Related posts

ஆப்கானிஸ்தானியர்களே !! உங்களை உளமாற வாழ்த்துகிறேன்.

wpengine

நீதிமன்ற கட்டுப்பாடுகளை மீறிய ஞானசார தேரர்! துப்பாக்கிச் சூடுபட்டவரை நலம் விசாரித்தார்

wpengine

கடற்படையினரால் கையகப்படுத்தப்பட்டுள்ள சிலாவத்துறை காணி மீளப் பெற்றுக்கொடுக்க நடவடிக்கை அமைச்சர் றிசாட்

wpengine