செய்திகள்பிரதான செய்திகள்

கடந்த 10 நாட்களில் 1300 மில்லியன் வருமானம் ஈட்டிய இ.போ.ச

தேசிய போக்குவரத்து சபை, கடந்த 10 ஆம் திகதி முதல் 19 ஆம் திகதி வரையிலான காலப்பகுதியில் 1,300 மில்லியன் ரூபா வருமானத்தை பெற்றுள்ளதாக, தேசிய சபையின் போக்குவரத்து முகாமையாளர் எச்.பியதிலக்க தெரிவித்தார்.

தமிழ் சிங்கள புத்தாண்டில் தமது சொந்த ஊர்களுக்குச் சென்ற மக்கள் மீள திரும்புவதற்கான விசேட போக்குவரத்துச் சேவைகள் தொடர்ந்து இடம்பெறுவதாகவும், இதனால் எதிர்வரும் நாட்களில் இந்த வருமானம் மேலும் அதிகரிக்கக்கூடும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

இதேவேளை, கண்டி ஸ்ரீ தலதா மாளிகை யாத்திரையில் பங்கேற்கும் பக்தர்களுக்காக விசேட பஸ் சேவை இடம்பெற்று வருவதாக தெரிவித்த அவர், நாளாந்தம் கண்டி-கொழும்பு பாதையில் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான 150 பஸ்கள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் தேசிய போக்குவரத்து சபை போக்குவரத்து முகாமையாளர் எச்.பியதிலக்க தெரிவித்தார்

Related posts

‘காத்தான்குடிப் பாடசாலைகள் முற்றாகப் புறக்கணிக்கப்பட்டமைக்கான காரணம் என்ன?

Editor

சபீக் ரஜாப்தீன் இல்லாத நிலையில் அதிஉயர்பீட கூட்டத்துக்கு சண்டியர்களை ஏற்பாடு செய்வது யார் ?  

wpengine

முகநூல் தொடர்பாக இங்கிலாந்தில் பெரும் சர்ச்சை வெடித்துள்ளது. 

wpengine