அரசியல்செய்திகள்பிரதான செய்திகள்

24 மணி நேரத்தில் 162 தேர்தல் முறைப்பாடுகள்..!

உள்ளூராட்சித் தேர்தலுடன் தொடர்புடைய முறைப்பாடுகளின் எண்ணிக்கையை தேர்தல் ஆணைக்குழு வெளியிட்டுள்ளது.

அதனடிப்படையில், 20ஆம் திகதியிருந்து 19ஆம் திகதி வரை 1874 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் 162 முறைப்பாடுகள் பதிவாகியுள்ள நிலையில், இதுவரை தேர்தல் குறித்த ஒரு வன்முறை சம்பவம் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

தேர்தல் சட்டத்தை மீறியமை தொடர்பான முறைப்பாடுகளே இதுவரை அதிகமாக கிடைக்கப் பெற்றுள்ளது.

அதனடிப்படையில் இதுவரையான முறைப்பாடுகளில் 1607 முறைப்பாடுகளுக்கான தீர்வுகள் கண்டறியப்பட்ட நிலையில், 267 முறைப்பாடுகள் குறித்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது.

Related posts

தமிழ் பாடசாலை, தேசிய பாடசாலை தமிழ் பிரிவுகளையும் ஒன்றாக சேர்த்து பிரத்தியேக வலயமொன்றை அமைக்க வேண்டும்.

Maash

பொருள், சேவைகளுக்கு ஏற்ப கட்டணம் அல்ல விலைகள் மாறுபடும், மக்கள் பழகிக்கொள்ள வேண்டும்.

Maash

துருக்கி ஆட்சிக்கவிழ்ப்பு தொடர்பான விசாரணை: 40 படையினர் கைது

wpengine