செய்திகள்பிரதான செய்திகள்

ஓட்டமாவடி – மீராவோடை சந்தையின் பின் பகுதி ஆற்றில் சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு, ஓட்டமாவடி – மீராவோடை சந்தையின் பின் பகுதியிலுள்ள ஆற்றில் வெள்ளிக்கிழமை (18) அதிகாலை சடலம் ஒன்று மிதந்து வந்துள்ளது. 

ஆற்றில் மீன்பிடிப்பதற்காக சென்ற மீனவர்கள் ஆண் ஒருவரின் சடலம் மிதப்பதைக் கண்டு பொலிஸாருக்கு அறிவித்துள்ளனர்.

அடையாளம் காணப்படாத சடலம் ஆற்றிலிருந்து மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக வாழைச்சேனை ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வாழைச்சேனை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Related posts

மாதாந்த எரிபொருள் விலை திருத்தத்தின்படி, நள்ளிரவு முதல் எரிபொருளின் விலையில் மாற்றம்.

Maash

சிலோன் முஸ்லிம் இணையத்தள செய்தி ஊடக அலுவலகம் மீது சிறு ஒயில்வீச்சு

wpengine

முஸ்லிம் சமூகத்தின் நவீன சார்ளி சப்ளினாக மாறியுள்ள மு கா தலைவர்.

wpengine