செய்திகள்பிரதான செய்திகள்

சட்டவிரோத சொத்துக்கள் அரசுடமையாக்கும் திட்டம் விரைவில் . . !

டந்த கால அரசாங்கங்களில் சட்டவிரோதமாக அல்லது முறைகேடாக கையகப்படுத்தப்பட்ட அரச சொத்துக்களை அரசுடமையாக்குவதற்கான புதிய சட்டங்களை உள்ளடக்கிய சட்டமூலம் நாடாளுமன்றில்  சமர்ப்பிக்கப்படும் என தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் சந்தன சூரியராச்சி தெரிவித்துள்ளார்.

அத்துடன் குறித்த சட்டமூலம் ஏப்ரல் மாதம் 8 ஆம் திகதி நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

இச் சட்டத்தின் மூலம், இந்த நாட்டில் அரச சொத்துக்கள் மற்றும் பொது நிதியை துஷ்பிரயோகம் செய்யும் தனிநபர்களின் எந்தவொரு சொத்தும் நீதிமன்ற நடவடிக்கைகள் மூலம் சட்டப்பூர்வமாக அரசுடமையாக்கப்படும் என்று அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

வட மாகாண அமைச்சர்கள் எதை செய்யப்போகின்றார்!இந்த நிலையில் செயலாளர் கோரிக்கை

wpengine

எவர் எப்படி கேலி செய்தாலும் எனது முயற்சிகள் ஒருபோதும் கைவிடப்படமாட்டாது!
-எதிர்க்கட்சித் தலைவர்-

Editor

மன்னார் டிப்போக்கு திடீர் விஜயம் மேற்கொண்ட மாவட்டச் செயலாளர் !

Editor