செய்திகள்பிராந்திய செய்திவவுனியா

வவுனியா – ஓமந்தை உள்நாட்டுத் துப்பாக்கியுடன் ஒருவர் கைது !

வவுனியா – ஓமந்தை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட நாயக்குளம் பகுதியில்உள்நாட்டுத் துப்பாக்கியுடன் ஓமந்தை பொலிஸாரால் வெள்ளிக்கிழமை (14) கைது செய்யப்பட்டுள்ளார்.

ஓமந்தை பொலிஸ் நிலைய அதிகாரிகள் குழுவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபர் 58 வயதுடைய ஓமந்தை நாயக்குளம் பகுதியைச் சேர்ந்தவர் ஆவார்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை ஓமந்தை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். 

☀️ வன்னிநியூஸ் வட்ஸ்ப் குழுவில் இணைய: https://chat.whatsapp.com/ECH9aFFlKIJB0htsdAdJyg

Related posts

நாட்டின் இராணுவ வீரர்களை சர்வதேசத்தின் மத்தியில் காட்டிக் கொடுப்பதற்கான முயட்சியில் அரசாங்கம் .

Maash

சட்டவிரோதமாக கழுதைகளை கடத்திய இருவரை நுரைச்சோலை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

Maash

பட்டப்பகல் திருட்டு, வவுனியாவில் மூவர் கைது..!

Maash