வவுனியா – ஓமந்தை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட நாயக்குளம் பகுதியில்உள்நாட்டுத் துப்பாக்கியுடன் ஓமந்தை பொலிஸாரால் வெள்ளிக்கிழமை (14) கைது செய்யப்பட்டுள்ளார்.
ஓமந்தை பொலிஸ் நிலைய அதிகாரிகள் குழுவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபர் 58 வயதுடைய ஓமந்தை நாயக்குளம் பகுதியைச் சேர்ந்தவர் ஆவார்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை ஓமந்தை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
☀️ வன்னிநியூஸ் வட்ஸ்ப் குழுவில் இணைய: https://chat.whatsapp.com/ECH9aFFlKIJB0htsdAdJyg