பிரதான செய்திகள்

அனுராதபுரத்தில் பஸ் – மோட்டார் சைக்கிள் விபத்தில் சிக்கி யுவதி பலி .! CCTV வீடியோ உள்ளே

அனுராதபுரத்தில் மோட்டார் சைக்கிள் விபத்தில் சிக்கி யுவதி ஒருவர் உயிரிழந்த நிலையில் தந்தை படுகாயமடைந்துள்ளார்.

அனுராதபுரம், பந்துலகமவில் உள்ள அரச உயர் தொழில்நுட்பக் கல்வி நிறுவனத்தில் படித்து வந்த எப்பாவல பகுதியை சேர்ந்த சந்தரேகா சுபோதனி ஹேமந்தா (வயது – 20) என்ற யுவதியே உயிரிழந்தார்.

கல்னேவ பகுதியிலிருந்து அனுராதபுரம் நோக்கி பயணித்த தனியார் பேருந்து, மோட்டார் சைக்கிளில் மோதியுள்ளது.

இதன்போது மோட்டார் சைக்கிளில் பயணித்த மகள் உயிரிழந்ததாகவும், தந்தை படுகாயமடைந்ததாகவும் அனுராதபுரம் பொலிஸார் தெரிவித்தனர்.

தந்தையுடன் பாடநெறியில் கலந்துகொள்ள மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தபோது விபத்து ஏற்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

விபத்தில் படுகாயமடைந்த யுவதி அனுராதபுரம் போதனா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.

இந்த நிலையில் 35 வயதுடைய பேருந்து சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.

வீடியோவை பார்வையிட :

https://www.facebook.com/vanninews.lkOfficial/videos/988591930031855https://www.facebook.com/vanninews.lkOfficial/videos/988591930031855

Related posts

திரவ நைட்ரஜன் பசளையின் முதல் தொகுதி நாட்டை வந்தடைந்தது.

wpengine

யாழில் மக்கள் கவனத்தை ஈர்த்த மாட்டுவண்டி பவனி!

Maash

உலக வங்கியிடம் இருந்து 600 மில்லியன் டொலர்கள் நிதியுதவி! தொடர்ந்தும் ஒத்துழைப்பு வழங்க இணக்கம்.

wpengine