நாடு தழுவிய EMS (Express Mail Service) ஊக்குவிப்பு நிகழ்ச்சித்திட்டம் இன்று யாழ்ப்பாணம் அஞ்சல் அலுவலகத்திலும் இடம்பெற்றது.
இன்று காலை யாழ்ப்பாண பிரதேச அஞ்சல் அத்தியச்சகர் S.A.D.பெர்ணாந்து தலைமையில் நடைபெற்ற குறித்த நிகழ்வில், கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் பிரதம விருந்தினராக கலந்துகொண்டார்.
சர்வதேச கடுகதித் தபால் சேவையான EMS மூலம் இலங்கை உள்ளிட்ட 48 நாடுகள் பொருட்களை பரிமாற்றிக் கொள்கின்றமை குறிப்பிடத்தக்கது.

