செய்திகள்பிரதான செய்திகள்

சிறு போக பயிர்ச்செய்கைக்கு உகந்த சூழலை ஏற்படுத்தி, தட்டுப்பாடின்றி உரம் வழங்க தீர்மானம் .

சிறுபோகத்தின் போது பயிர்ச்செய்கைகளை ஆரம்பிப்பதற்காக வயல்நிலங்களுக்குத் தேவையான உரத்தைத் தட்டுப்பாடின்றி தொடர்ச்சியாக வழங்குவதன் அவசியத்தை ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க வலியுறுத்தினார். 

சிறு போகத்திற்கு அவசியமான உர விநியோகம் தொடர்பில் ஜனாதிபதி செயலகத்தில் நேற்று நடைபெற்ற கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டார். 

சிறு போக நெற்பயிர்ச்செய்கை மற்றும் ஏனைய விவசாய நடவடிக்கைகளுக்கு தேவையான உரம் தொடர்பில் ஆராயப்பட்டது . 

தடையின்றி விவசாயிகளுக்கு சிறு போக பயிர்ச்செய்கையை ஆரம்பிப்பதற்கு உகந்த சூழலை ஏற்படுத்திக் கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் ஜனாதிபதி மேலும் சுட்டிக்காட்டினார்.

Related posts

கைத்தொழில், வர்த்தக அமைச்சர் றிசாத் பதியுதீன் அவர்களின் ஹஜ்ஜுப் பெருநாள் வாழ்த்துச் செய்தி

wpengine

சில மாதங்களில் அவசர மருந்து கொள்வனவை நிறுத்த நடவடிக்கை!

Editor

பயங்கரவாத தடைச் சட்டத்தை ஒழிக்குமாறு ஹக்கீம் கோட்டையில் கையெழுத்து.

wpengine