செய்திகள்

சிசிடிவி கமரா இருந்தால் மட்டுமே வீதி அனுமதி பத்திரம்! தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் தலைவர்.

தனியார் பேருந்துகளில் சிசிடிவி பாதுகாப்பு கமரா இருந்தால் மாத்திரமே தனியார் பேருந்துகளுக்கான வீதி அனுமதி பத்திரம் வழங்கப்படும் எனத் தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் தலைவர் பி.டி. விதாரன தெரிவித்தார். 

மேலும் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் தொடர்பான முறைப்பாடுகளை அறிவிப்பதற்கு தொலைபேசி இலக்கத்தை அறிமுகப்படுத்துவதற்கு எதிர்பார்ப்பதாகவும் அவர் தெரிவித்தார். 

அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று (05) நடைபெற்ற விசேட ஊடக கலந்துரையாடலில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். 

பொதுப் போக்குவரத்தின் போது பெண்களுக்கு ஏற்படும் வன்முறைகளைத் தவிர்ப்பதற்காக நீண்ட கால வேலைத்திட்டம் ஒன்று அவசியம் என்றும், பொதுப் போக்குவரத்தைப் பெண்களுக்கான பொது இடமாக மாற்றுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் இதன் போது சுட்டிக்காட்டினார்.

Related posts

5,000 மதத் தலங்களில் சூரிய மின் தகடுகள் ..!

Maash

மன்னார் நகரசபை பண்டிகைக்கால கடை வழங்கியதில் ஊழல் : நகரசபை முதல்வர் டானியல் வசந்தன்.

Maash

மட்டக்களப்பில் நண்பர்களுக்கு இடையே ஏற்பபட்ட மோதலில் ஒருவர் உயிரிழப்பு . .!

Maash