செய்திகள்பிராந்திய செய்திவவுனியா

வவுனியா நகரப் பகுதி உணவகம் மீது தாக்குதல், ஒருவர் கைது.

வவுனியா நகரப் பகுதியில் உள்ள உணவகம் ஒன்றின் மீது தாக்குதல் நடத்தியதாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக வவுனியா பொலிசார் தெரிவித்தனர்.

இரவு இடம்பெற்ற இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

வவுனியா நகர மணிக்கூட்டு கோபுரத்திற்கு அண்மையில் உள்ள சைவ உணவகம் ஒன்றிற்கு சில இளைஞர்கள் சென்றுள்ளனர்.

அதில் ஒரு இளைஞர் கையில் கொண்டு சென்ற பியர் போத்தலால் குறித்த சைவ உணவகத்தின் கண்ணாடிக் பெட்டியின் மீது தாக்குதல் நடத்தியுள்ளார்.

இதனால் கண்ணாடி பெட்டி உடைந்து சேதமடைந்துள்ளது.

சம்பவம் தொடர்பில் உணவக உரிமையாளர் பொலிசாருக்கு தகவல் வழங்கியதையடுத்து அங்கு வந்த வவுனியா பொலிசார் ஒருவரை கைது செய்துள்ளனர்.

Related posts

யாத்திரை சென்று திரும்பியவர்கள் மேல் டிப்பர் வாகனம் மோதியதில், நசுங்கி இருவர் பலி..!

Maash

வன்னிக்கு தேசியப்பட்டியலா?

wpengine

தமிழ் தேசியக் கூட்டமைப்பு எம்.பியின் மகன் மீது தாக்குதல்!

Editor