அகில இலங்கை மக்கள் காங்கிரஸின், திருகோணமலை மாவட்ட மத்திய குழுக்கூட்டமும், எதிர்வரும் உள்ளூராட்சிமன்ற தேர்தல் தொடர்பான கலந்துரையாடலும் நேற்று (26) கிண்ணியாவில் கட்சியின் தேசியத்தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான றிஷாட் பதியுதீனின் தலைமையில் இடம்பெற்றது.
கட்சியின் தேசிய அமைப்பாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான அஷ்ரப் தாஹிர், கட்சியின் பிரதித்தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான முத்து முஹம்மட் உள்ளிட்டவர்கர்களுடன், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் திருகோணமலை மாவட்ட உயர்பீட உறுப்பினர்கள், முன்னாள் உள்ளூராட்சிமன்ற உறுப்பினர்கள், கட்சி முக்கியஸ்த்தர்கள் ஆதரவாளர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்..