அரசியல்செய்திகள்பிரதான செய்திகள்

மீண்டும் பாராளுமன்ற உறுப்பினராக ரணில் .!

புதிய ஜனநாயக முன்னணியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க இந்த ஆண்டு இறுதிக்குள் பாராளுமன்ற உறுப்பினராகப் பதவியேற்க உள்ளார் என்று நம்பகமான அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

கட்சியின் தேசியப் பட்டியலில் இருந்து பாராளுமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட இரண்டு பாராளுமன்ற உறுப்பினர்களில் ஒருவர், ரணில் விக்கிரமசிங்கவுக்கு வாய்ப்பளிக்கும் வகையில் ராஜினாமா செய்வார் என்றும் அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

பாராளுமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு, எதிர்க்கட்சியைச் சேர்ந்த பல பாராளுமன்ற உறுப்பினர்கள் விக்கிரமசிங்கவுடன் கைகோர்க்கத் திட்டமிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

பல்வேறு கட்சிகள் ஏற்கனவே ரணில் விக்கிரமசிங்கவை பாராளுமன்றத்திற்கு வருமாறு முன்மொழிந்துள்ளன.

ரணில் விக்கிரமசிங்க சமீபத்தில் காலி பகுதிக்கு விஜயம் செய்தபோது, மக்கள் அவரை பாராளுமன்றத்திற்கு வந்து பொது சேவையில் சேருமாறு கேட்டுக்கொண்டனர். இந்தச் சந்தர்ப்பத்தில், ரணில், “கொஞ்சம் பொறுமையாக இருங்கள்” என்று கூறியிருந்தார்

Related posts

வடபுல முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்திற்கு பாரிய முட்டுக்கட்டை-அமைச்சர் றிஷாட்

wpengine

சுவையான தேங்காய் சம்பலை சிறையிலேயே சாப்பிடுகின்றேன் ராஜித

wpengine

பேரின வாதிகளும்,குறுகிய சிந்தனையாளர்களும் அமைச்சர் றிஷாட் பதியுதீனை குறை கூறியும், கொக்கரித்தனர்.

wpengine