பிரதான செய்திகள்

3 பிள்ளைகளின் தாயை காணவில்லையென பொலிஸில் முறைப்பாடு !

3 பிள்ளைகளின் தாய் 7 நாட்களாக வீட்டை விட்டுவெளியேறிய நிலையில், வீடு திரும்பவில்லை என உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

அம்பாறை மாவட்டம் சாய்ந்தமருது பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புறநகர் பகுதியில் வசிக்கும் 3 பிள்ளைகளின் தாய் கடந்த திங்கட்கிழமை (10) முதல் காணாமல் போயுள்ளதாக உறவினர்களால் பொலிஸில் முறைப்பாடு அளிக்கப்பட்டுள்ளது.

குறித்த முறைப்பாட்டின் பிரகாரம் சாய்ந்தமருது பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தலைமையில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இப்பெண் தொடர்பில்  ஏதாவது அறிந்திருந்தால்  உடனடியாக 0767824592,0753251281 தொலைபேசி இலக்கங்களுக்கு  தெரியப்படுத்துமாறு கேட்கப்பட்டுள்ளது.

Related posts

முரட்டுத்தனமாக மாணவனை தாக்கிய ஆசிரியர் – வீடியோ இணைப்பு

wpengine

குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்க நடவடிக்கை- தினேஸ்

wpengine

ஒரு லச்சம் பேருக்கான காணி வழங்கும் வேலைத்திட்டம் வவுனியாவில்

wpengine