பிரதான செய்திகள்

3 பிள்ளைகளின் தாயை காணவில்லையென பொலிஸில் முறைப்பாடு !

3 பிள்ளைகளின் தாய் 7 நாட்களாக வீட்டை விட்டுவெளியேறிய நிலையில், வீடு திரும்பவில்லை என உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

அம்பாறை மாவட்டம் சாய்ந்தமருது பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புறநகர் பகுதியில் வசிக்கும் 3 பிள்ளைகளின் தாய் கடந்த திங்கட்கிழமை (10) முதல் காணாமல் போயுள்ளதாக உறவினர்களால் பொலிஸில் முறைப்பாடு அளிக்கப்பட்டுள்ளது.

குறித்த முறைப்பாட்டின் பிரகாரம் சாய்ந்தமருது பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தலைமையில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இப்பெண் தொடர்பில்  ஏதாவது அறிந்திருந்தால்  உடனடியாக 0767824592,0753251281 தொலைபேசி இலக்கங்களுக்கு  தெரியப்படுத்துமாறு கேட்கப்பட்டுள்ளது.

Related posts

அமைச்சர் ஹக்கீமுக்கு எதிராக சாய்ந்தமருது பிரதேசத்தில் கறுப்புக்கொடி

wpengine

அமைச்சர் பசில் ராஜபக்ஷ நாடு திரும்பியதும் நேரடியாக பிரதமர் பதவியை ஏற்கவுள்ளார்.

wpengine

பிரபாகரன் பேச்சுவார்த்தை மூலம் தீர்வை காணவிரும்ப வில்லை -கோத்தா

wpengine