செய்திகள்பிரதான செய்திகள்விளையாட்டு

துபாயில் பரா தடகள கிராண்ட் பிரிக்ஸ் 2025 குண்டு எறிதல் போட்டியில் இராணுவ வீரர் தங்கப்பதக்கம் வென்று சாதனை.

துபாயில் நடைபெற்ற பரா தடகள கிராண்ட் பிரிக்ஸ் 2025 குண்டு எறிதல் போட்டியில், இலங்கை இராணுவ வீரரான, பணிநிலை சார்ஜன் எச்.ஜி.பாலித பண்டார தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.
இவரது இந்த சாதனை நாட்டிற்கு பெருமை சேர்த்துள்ளதாகவும், பரா தடகள விளையாட்டில் ஒரு சிறந்த சாதனையெனவும் இராணுவ ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

இது சர்வதேச பரா தடகள விளையாட்டுக்களில் இலங்கையின் இருப்பை உறுதிப்படுத்துவதாகவும், இலங்கைக்கான தடகள விளையாட்டு களத்தை சர்வதேச அளவில் முன்னெடுத்து செல்வதாகவும் அமைந்துள்ளதென அந்த ஊடகப் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது

Related posts

இலங்கை முஸ்லிம்களை ரோஹிங்கியரை போன்று ஆக்கும்வரை ஹக்கீமின் வியாபாரம் தொடரும்

wpengine

அப்பிள் நிறுவனத்தின் புதிய படைப்பு iPad Pro 9.7

wpengine

வடக்கு முஸ்லிம்களின் அடிப்படை தேவைகளை பெற்றுக்கொடுக்க செயற்படுவோம்! மாவை

wpengine