அரசியல்செய்திகள்பிரதான செய்திகள்

பிரான்ஸ் அகதிகள் , குடியுரிமை அற்றோருக்கான பாதுகாப்பு அலுவலக பிரதிநிதிகளுக்கும், ACMC பிரதிநிதிகளுக்கும் இடையிலான சந்திப்பு .!

பிரான்ஸ் நாட்டினை தலைமையகமாகக் கொண்டு செயற்படுகின்ற அகதிகள் மற்றும் குடியுரிமை அற்றோருக்கான பாதுகாப்பு அலுவலக பிரதிநிதிகளுக்கும், அகில இலங்கையில் மக்கள் காங்கிரஸின் பிரதிநிதிகளுக்கும் இடையிலான சந்திப்பு இன்று (11) கொழும்பில் இடம் பெற்றது.

இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள மேற்படி அமைப்பின் பிரதிநிதிகள் அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் மற்றும் கட்சியின் செயலாளர் நாயகம் எஸ். சுபைர்தீன் ஆகியோரை சந்தித்து கலந்துரையாடலில் ஈடுபட்டனர்.

இதன்போது, இலங்கையிலிருந்து பிரான்ஸ் மற்றும் பிற நாடுகளுக்கு பயணிக்கும் அகதிகளின் நிலைமை உள்ளிட்ட முக்கிய விவகாரங்கள் பற்றி இரு நாட்டு தரப்புக்களுக்கும் இடையில் கலந்துரையாடல் இடம்பெற்றது.

Related posts

அமெரிக்காவின் வரிவிதிப்பின் தீர்வுக்கு ரணிலின் அறிவுரை . .!

Maash

அரசியலை விட தேசிய நலன்களுக்கு முன்னுரிமை வழங்குங்கள் – சஜித்துக்கு ரணில் கோரிக்கை!

Editor

பெப்ரவரி 10 ஆம் திகதி உள்ளூராட்சி மன்ற தேர்தல்

wpengine