பிரதான செய்திகள்பிராந்திய செய்திவவுனியா

வவுனியா பசார் வீதி கடைத்தொகுதியில் ஒரு குடும்பஸ்தரின் சடலம் .!

வவுனியா பசார் வீதியில் அமைந்துள்ள கடைத்தொகுதியில் இருந்து குடும்பஸ்தர் ஒருவரின் சடலம் இன்று காலை மீட்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பாக தெரியவருகையில்… பசார் வீதியில் அமைந்துள்ள நகைபட்டறை ஒன்றில் தொழில் புரிந்துவரும் குடும்பஸ்தர் நேற்றயதினம் இரவு வீட்டிலிருந்து தொழில்நிமித்தம் கடைக்கு சென்றுள்ளார்.

இந்நிலையில் அவரது சடலம் பட்டறை அமைந்துள்ள மாடிகட்டடத்தின் கீழ் தளத்தில் இருந்து இன்று காலை மீட்கப்பட்டது.

சம்பவத்தில் சாந்தசோலை பகுதியை சேர்ந்த சுப்பையா ஆனந்தன் என்ற 40 வயது குடும்பஸ்தரின் சடலமே மீட்கப்பட்டுள்ளது.

அவர் மாடிக்கட்டடத்தில் இருந்து தவறி வீழ்ந்ததால் மரணமடைந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது. சம்பவம் தொடர்பாக தடயவியல் பொலிசாரின் உதவியுடன் வவுனியா குற்றத்தடுப்பு பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Related posts

‘கீழாடையுடன் மட்டுமே 90 நாள் வைத்திருந்தனர்’ – சேனக்க டி சில்வா

wpengine

மொட்டுக்கட்சியில் முரண்பாடு! மைத்திரி,விமல் இரகசிய சந்திப்பு

wpengine

அஸ்வெசும திட்டத்தில் வசதி படைத்தவர்கள் ! , வறுமை நிலையிலுள்ள பலர் உள்வாங்கப்படவில்லை .

Maash