செய்திகள்பிரதான செய்திகள்

பாடசாலை கல்வித்துறையில் ஒரு இலட்சத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு வழங்கப்படாமல் உள்ளது.

கல்விச் சேவையில் அதிபர்கள், ஆசிரியர்கள், ஆசிரிய ஆலோசகர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் ஆசிரியர் அதிபர் தொழிற்சங்க ஒன்றியத்திற்கும் கல்வி அமைச்சுக்கும் இடையே இன்று (08) பேச்சுவார்த்தை ஒன்று இடம்பெற்றுள்ளது.

இலங்கையின் பாடசாலை கல்வித்துறையில் ஒரு இலட்சத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு வழங்கப்படாமல் உள்ளது.

இந்நிலையில், கல்வி அமைச்சும் பொதுச்சேவை ஆணைக்குழுவும் ஒன்றிணைந்து தீர்மானம் ஒன்று மேற்கொண்டுள்ளதோடு, குறிப்பாக வரவு – செலவு திட்டத்தில் இதற்கான தீர்வு முன்வைக்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் ஆசிரியர் பற்றாக்குறை, ஆசிரியர் இடமாற்றம் தொடர்பில் சுற்றறிக்கை வெளியிடப்பட்டு அதற்கான தீர்வு நடைமுறையில் முன்வைக்கப்பட வேண்டும் என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Related posts

“இலங்கை மக்களின் துன்பியல் வாழ்க்கையை புதிய வடிவில் உலகரியச் செய்தார் கவிஞர் பொத்துவில் அஸ்மின்”

wpengine

சுரேஷ் பிரேமச்சந்திரன் அரசியல் விபச்சாரி கஜேந்திரகுமார்

wpengine

‘வன்னிச் சமூகங்களை குழப்பி வாக்கு வேட்டையாட சிலர் சதி; சோரம் போகாது துணிந்து நில்லுங்கள்’ – மன்னாரில் முன்னாள் அமைச்சர் ரிஷாட்

wpengine