செய்திகள்பிரதான செய்திகள்

இஷாதி அமந்தா, இன்று (04) நாடு திரும்பினார்

அமெரிக்காவின் லாஸ் வேகாஸில் நடைபெற்ற 40ஆவது திருமதி உலக அழகி போட்டியில் இரண்டாம் இடத்தை பிடித்த இலங்கையைச் சேர்ந்த இஷாதி அமந்தா இன்று நாடு திரும்பியுள்ளார். 

கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து அவரை வரவேற்க இலங்கை சுற்றுலா அபிவிருத்தி பணியகத்தின் விசேட முனையத்தில் நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததாக விமான நிலையத்திற்கான எமது செய்தியாளர் தெரிவித்தார். 

இந்த நிகழ்வில், திருமதி உலக அழகி போட்டியின் இலங்கைக்கான பணிப்பாளர் சந்திமல் ஜயசிங்க மற்றும் இலங்கை அணியின் பயிற்றுவிப்பாளர் ருக்மல் சேநானாயக்க ஆகியோர் கலந்து கொண்டனர். 

இதேவேளை, அண்மையில் இடம்பெற்ற திருமதி உலக அழகி போட்டியில் தென் ஆபிரிக்கா முதலிடத்தைப் பெற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.

Related posts

கட்சியை ஆல மரமாய் அஷ்ரப் வளத்தெடுத்தார்! பின்வந்தவர்கள் கட்சியை வளப்பதற்காக மரங்களை நட்டுக் கொண்டிருக்கின்றார்கள்.

wpengine

வவுனியா வாழவைத்தகுளம் அல் மினா சிறுவர் பாடசாலையில் கலை கலாசார நிகழ்வுகள்

wpengine

எதிர்காலத்தில் ஏற்படப்போகின்ற ஆபத்தினை தடுப்பதற்காக கூட்டமைப்பினை உருவாக்கினோம் அமைச்சர் றிஷாட்

wpengine