பிரதான செய்திகள்

மக்கள் அனைவரும் சுதந்திரக் கனவை ஒன்றாகக் காண்போம்; ஜனாதிபதி

இலங்கையின் 77 ஆவது சுதந்திர தினம் இன்று கொண்டாப்படும் நிலையில், நாட்டில் சமூக, பொருளாதார மற்றும் கலாசார ரீதியான சுதந்திரத்தினை முழுமையாக வென்றெடுப்பதற்கான போராட்டத்தில் நாட்டின் அனைத்து இனத்தவர்களும் இணைந்து செயற்பட வேண்டிய தேவை உள்ளதாக ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

கொழும்பு – சுதந்திர சதுக்கத்தில் இன்று காலை இடம்பெற்ற நாட்டின் 77ஆவது சுதந்திர தின நிகழ்வில் பங்கேற்று உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

நாட்டை பாதுகாத்து வளமானதாக மாற்றுவதற்கான பொறுப்பு உணவு உற்பத்தி செய்யும் விவசாயி முதல் நாட்டை காக்கும் முப்படையினர் வரை அனைவருக்கும் உள்ளது. நாட்டின் பொருளாதாரத்தைப் பலப்படுத்தும் சகல தொழிற்துறையினரும் இதில் பங்குதாரர்களாக உள்ளனர்.

எனவே நாட்டை பொருளாதார ரீதியில் சுதந்திரமானதாக மாற்றுவதற்கு இந்த நாட்டின் சகல பிரஜைகளும் ஒன்றிணைய வேண்டும் எனவும் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க இதன்போது தெரிவித்துள்ளார்.

Related posts

பள்ளிவாசல்,பெளத்த குருமார்களையும் தலதா மாளிகையும் தாக்கிய பிள்ளையான் நீலக்கண்ணீர்

wpengine

சுகாதார ஊழியர்களுக்கான விசேட எரிபொருள் விநியோக திட்டம்

wpengine

விக்கினேஸ்வரன் வடக்கு – கிழக்கு இணைப்பு முஸ்லிம்களிடையே ஒருவித அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது -ஏ.எம்.ஜெமீல்

wpengine