பிரதான செய்திகள்

ஜனாதிபதியை சந்தித்த மன்னார் கட்டுக்கரை திட்டக் குழுவினர்!

மன்னார் மாவட்ட கட்டுகரை திட்ட குழுவினர் நேற்றைய தினம் ஜனாதிபதியை சந்தித்திருந்தனர்.
மன்னார் மாவட்டத்தில் விவசாயிகள் எதிர்நோக்கும் பல்வேறுபட்ட இடர்கள் தொடர்பாக திட்டக் குழுவினர் ஜனாதிபதிக்கு எடுத்துரைத்தனர் குறிப்பாக கீழ் மல்வத்தோயா மற்றும் கட்டுக்கரை குள புனரமைப்பு பணிகள் இடைநிறுத்தப்பட்டிருப்பது தொடர்பாக ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டு வந்ததன் பிரகாரம் உடனடியாக அவ் வேலைத்திட்ங்களை ஆரம்பிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதாக ஜனாதிபதி தெரிவித்தார்.

தற்போது வழங்கப்பட்டுக் கொண்டிருக்கும் விவசாயிகளுக்கான உர கொடுப்பனவு தொடர்ச்சியாக வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையையும் இவர்கள் முன்வைத்தபோது தொடர்ச்சியாக உரத்திற்கான கொடுப்பனவு வழங்கப்படும் என ஜனாதிபதி உறுதியளித்தார்.

குறித்த ஜனாதிபதியுடனான சந்திப்பில் பாராளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலனாதன் மற்றும் மன்னார் மாவட்ட கட்டு கரை திட்டக் குழுவினர் கலந்து கொண்டணர்!

Related posts

இணைய குற்றங்களை தடுக்க புதிய பொலிஸ் பிரிவு லண்டன் மேயர் சாதிக் கான்

wpengine

முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் கோட்டையான அம்பாரையில் இன்று மயில்

wpengine

யாப்பா,கபீர் ஹாசிம் வாகனங்களை மறித்து ஆர்ப்பாட்டம்

wpengine