பிரதான செய்திகள்

ஜனாதிபதி வேட்பாளராக டளஸ் அழகப்பெருமவை நியமிக்க சுதந்திர மக்கள் சபை தீர்மானம்!

பாராளுமன்ற உறுப்பினர் டளஸ் அழகப்பெருமவை எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் வேட்பாளராக நிறுத்த சுதந்திர மக்கள் சபை தீர்மானித்துள்ளது.

இதனடிப்படையில், இதனை ஆதரிக்கும் எவருடனும் கூட்டணி அமைக்க சுதந்திர மக்கள் சபை தயாராகி வருவதாக தெரியவருகிறது.

இது குறித்து எதிர்வரும் காலங்களில் எதிர்க்கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த தயார் என பாராளுமன்ற உறுப்பினர் லலித் எல்லாவள தெரிவித்துள்ளார்.

டளஸ் அழகப்பெரும நாட்டின் ஜனாதிபதியாகவும் பிரதமராகவும் பதவி வகிக்க தகுதியான ஊழல்,மோசடிகளில் சம்பந்தப்படாத நபர் எனவும் இதனால், அவரை நாட்டின் ஜனாதிபதி பதவிக்கு தெரிவு செய்ய எதிர்க்கட்சிகள் ஒன்றிணைய வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார்.

Related posts

இந்தியாவின் கடும்போக்கு பாரதீய ஜனதா கட்சி இலங்கைக்கு மக்கள் அச்சம்

wpengine

மன்னார் பிரதேச சபை தவிசாளரின் கவனத்திற்கு! பிரதேச சபை நடவடிக்கை எடுக்குமா

wpengine

கிளிநொச்சி சமுர்த்தி நியமனம் கவனம் செலுத்தாத பாராளுமன்ற உறுப்பினர்

wpengine