பிரதான செய்திகள்

பண மோசடி தொடர்பில் முன்னாள் மாநகர சபை பெண் உறுப்பினர் கைது!

ஐக்கிய தேசியக் கட்சியைச் சேர்ந்த மாநகர சபையின் முன்னாள் பெண் உறுப்பினர் ஒரு கோடியே பதினான்கு இலட்சம் ரூபாவை மோசடி செய்ததாக கிடைக்கப் பெற்ற 11 முறைப்பாடுகளையடுத்து  சந்தேகத்தின் பேரில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
 
இந்த முன்னாள் மாநகர சபை உறுப்பினர் பிலியந்தலை பிரதேசத்தில் வசிப்பவர் என பொலிஸார் தெரிவித்தனர்.

பண மோசடி தொடர்பில் கிடைக்கப்பெற்ற 11 முறைப்பாடுகள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்வதற்காக முன்னாள் மாநகர சபை உறுப்பினருக்கு பிலியந்தலை பொலிஸில் ஆஜராகுமாறு அறிவிக்கப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இதன்படி அவர் பொலிஸ் நிலையத்துக்கு வந்தபோது மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் கைது செய்யப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

Related posts

துருக்கி எர்டோகனின் அதிரடி நடவடிக்கை

wpengine

அதிகாரம் தன்னிடம் இருந்திருக்குமாயின்! ஆளும் கட்சியில் பலர் இருந்திருக்க மாட்டார்கள்

wpengine

தேர்தல் முடியும் வரை அனைத்து அஞ்சல் ஊழியர்களின் விடுமுறைகளும் ரத்து..!

Maash