பிரதான செய்திகள்

ஊழியர்களின் விடுமுறை உடன் நடைமுறைக்கு வரும் வகையில் இரத்து

தொடருந்து திணைக்களத்தின் அனைத்து ஊழியர்களின் விடுமுறையும் உடன் நடைமுறைக்கு வரும் வகையில் இரத்துச் செய்யப்பட்டுள்ளது. 

27.02.2023 திகதியிட்ட 2321/07 இலக்கம் கொண்ட அரசாங்க அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலின் படி, ஜனாதிபதியினால் இலங்கை தொடருந்து  சேவை அத்தியாவசிய சேவையாக பிரகடனப்படுத் தப்பட்டது.

நாளை (15) பணிக்கு சமுகமளிக்காத அனைத்து அதிகாரிகளும் மன்னிப்பு கேட்டு அறிக்கை சமர்ப்பிக்குமாறு தொடருந்து  பொது முகாமையாளர் டபிள்யூ.ஏ.டி.எஸ்.குணசிங்க அனைத்து திணைக்கள தலைவர்களுக்கும் அறிவித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. 

Related posts

மன்னார் மாவட்ட கலை பண்பாட்டுப் பெருவிழா

wpengine

மன்னார் நகர சபையின் தீல்லுமுல்லு! பிரதேச மக்கள் விசனம்

wpengine

இலங்கை இராணுவத்துக்கு எதிராக ஐ.நா மனித உரிமை ஆணையாளரின் முதல் நடவடிக்கை!

Editor