பிரதான செய்திகள்

இலங்கையை ஸ்திரமான மற்றும் நிலையான வளர்ச்சிப் பாதையில் விரைவில் கொண்டு செல்ல நடவடிக்கை

இலங்கையை ஸ்திரமான மற்றும் நிலையான வளர்ச்சிப் பாதையில் விரைவில் கொண்டு செல்வதற்கு சர்வதேச நாணய நிதியத்தின் உறுதிப்பாட்டை சர்வதேச நாணய நிதியத்தின் நிர்வாக பணிப்பாளர் கிறிஸ்டலினா ஜோர்ஜீவா உறுதி செய்துள்ளார்.

சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் கிறிஸ்டலினா ஜோர்ஜீவாவுடனான இருதரப்பு கலந்துரையாடலின் பின்னர், சர்வதேச நாணய நிதியத்தின் 2022ஆம் ஆண்டிற்கான வருடாந்த கூட்டங்கள் நிறைவடைந்துள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.

சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர், பொருளாதார ஸ்திரத்தன்மையை மீட்பதற்காக அரசாங்கம் மேற்கொண்ட கடினமான ஆனால் அவசியமான சீர்திருத்தங்களுக்காக அரசாங்கத்தைப் பாராட்டியுள்ளார்.

அத்துடன், விரைவில் நாட்டை ஸ்திரமான மற்றும் நிலையான வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்வதற்கு இலங்கையுடன் இணைந்து பணியாற்றுவதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிர்வாக பணிப்பாளர் கிறிஸ்டலினா ஜோர்ஜீவா உறுதி செய்துள்ளார்.

Related posts

பாராளுமன்றத்தில் இந்துகளை கொஞ்சைப்படுத்திய அடைக்கல நாதன் பா.உ

wpengine

மொஹமட் ஷாகிப் சுலைமான் கடத்தல்! தெரிந்தால் அறிவிக்கவும்

wpengine

நல்லாட்சியினை காப்பாற்ற மீண்டும் பைசர் முஸ்தபா

wpengine