பிரதான செய்திகள்

கடத்தப்பட்ட முஸ்லிம் இளைஞன் கண்டுபிடிக்கப்பட்டார்.

கப்பம் பெரும் நோக்கில் வாரியபொல பிரதேசத்தில் கடத்தப்பட்ட 20 வயது இளைஞன் இன்று காலை நிகவரட்டிய கடிகார கோபுரம் அருகில் விட்டுசென்ற நிலையில் கண்டு பிடிக்கப்பட்டுள்ளார்.

கடத்தலில் ஈடுபட்ட சந்தேகநபர்கள் இருவர் கைது செய்யப்பட்டதன் பின்னர், சம்பவத்துடன் தொடர்புபட்ட ஏனையவர்களின் விபரங்களும் தெரியவந்துள்ளதாக குருநாகல் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் மகேஷ் செனரத்த தெரிவித்துள்ளார்.

அதற்கமைய அவர்களை கைது செய்ய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்ட சந்தர்ப்பத்தில், சந்தேகநபர்கள் குறித்த இளைஞனை கடிகார கோபுரம் அருகில் விட்டுசென்றதாக அறிவித்ததாகவும் பொலிஸ் அத்தியட்சகர் மேலும் குறிப்பிட்டார்.

குறித்த இளைஞன் தற்பொழுது நிகவரட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அத்துடன் தப்பியோடியவர்களைத் தேடும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இரண்டு கோடி கப்பம் பெரும் நோக்கில் வாரியபொல பிரதேசத்தில் கடந்த 12ஆம் திகதி இரவு, முஸ்லிம் இளைஞன் மொஹமட் ஆசிக் கடத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Related posts

ஒரு லச்சம் குழந்தைகளை கொலை செய்ய ஆப்கானிஸ்தான் போராளிகள் குழுக்கள் முடிவு

wpengine

மன்னாரில் 17 வயதுடைய பாடசாலை மாணவன் ஒருவர் கஞ்சா பொதியுடன் கைது

wpengine

ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிர்ப்பை காட்டிய! காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள்

wpengine