பிரதான செய்திகள்

அஸ்ரப் சிஹாப்தீன் மொழிபெயர்ப்புச் செய்த சிறுகதை நூலான “பட்டாம்பூச்சிக் கனவுகள்” வெளியீடு.

(நாச்சியாதீவு பர்வீன்)
பிரபல எழுத்தாளரும்,யாத்ரா கவிதை இதழின் பிரதம ஆசிரியரும்,இலங்கை இஸ்லாமிய இலக்கிய ஆய்வகத்தின் செயலாளரும்,ஒலி,ஒளிபரப்பாளருமான அஸ்ரப் சிஹாப்தீன் மொழிபெயர்ப்புச் செய்த  சிறுகதை நூலான “பட்டாம்பூச்சிக் கனவுகள்” நூலின் வெளியீட்டு விழா எதிர்வரும் 13.03.2016 அன்று கொழும்பு – 10, தெமடகொட வீதி, வை.எம்.எம்.ஏ. மண்டபத்தில்         பி.ப. 4.00 மணிக்கு வெளியிடப்படவுள்ளது.
மணிப்புலவர் மருதூர் ஏ.மஜீத் தலைமையில் நடைபெறவுள்ள இவ்விழாவில் பிரதம அதிதியாக கிராமியப் பொருளாதார அலுவல்கள் பிரதியமைச்சர் எம்.எஸ்.எஸ். அமீர் அலி அவர்களும் கௌரவ அதிதியாகக் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.முஜீபுர் ரஹ்மானும் கலந்து கொள்ளவுள்ளனர்.121b8298-7538-40a6-9a4f-e8a8bdfacf63

நூல் பற்றிய கருத்துரைகளை நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரான மல்லியப்பு சந்தி திலகரும் எழுத்தாளரும் கவிஞருமான லறீனா அப்துல் ஹக் அவர்களும் வழங்கவுள்ளனர்.

முதற்பிரதியை புரவலர் ஹாஷிம் உமர் அவர்கள் பெற்றுக் கொள்ளுவார்.

Related posts

மடு திருத்தலத்தில் சிங்கள தாய் மரணம்

wpengine

சந்தைப்படுத்தல் மற்றும் ஏற்றுமதியாளர்களின் நன்மை கருதி மசாலா பொருட்களுக்கு புதிய இணையத்தளம் அறிமுகம்!

Editor

ஜனநாயகத்தை குழிதோண்டிப் புதைத்த அடக்குமுறையாளர்கள்! சிறுபான்மை சமூகம் விழிப்புடன் செயலாற்ற வேண்டும்

wpengine