உலகச் செய்திகள்பிரதான செய்திகள்

கொவிட் பரிசோதனை இனி இல்லை – அமெரிக்கா அறிவிப்பு

கொவிட்-19 கட்டுப்பாடுகளை மேலும் தளர்த்த அமெரிக்கா அதிகாரிகள் தீர்மானித்துள்ளனர்.

அதன்படி, எதிர்வரும் ஞாயிற்றுக் கிழமை முதல் அமுலாகும் வகையில் கொவிட் கட்டுப்பாடுகளை தளர்த்த அந்நாட்டு நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் நடவடிக்கை எடுத்துள்ளது.

முன்னதாக, வேறு நாட்டிலிருந்து வருபவர்கள் அமெரிக்காவிற்குள் நுழைவதற்கு முன்பு கொவிட்-19 சோதனைக்கு உட்படுத்தப்படுதல் கட்டாயமாக்கப்பட்டிருந்தது.

எவ்வாறாயினும், கொவிட் வைரஸுக்கு எதிரான நடவடிக்கைகளின் முன்னேற்றம் காரணமாக கொவிட் 19 கட்டுப்பாடுகளை தொடர்ந்தும் செயற்படுத்தாமல் இருக்க தீர்மானிக்கப்பட்டதாக நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் மேலும் தெரிவித்துள்ளது.

Related posts

இராணுவத்தை அரசாங்கத்துக்கு நம்பிக்கையாக மாற்றுவதற்கும் தான் பணியாற்றுகின்றேன். ” ஜனாதிபதி “

Maash

ஹஜ் கடமைக்காக எல்லையினை திறக்க உள்ள மன்னர் சல்மான்

wpengine

சிறைத்தண்டனையில் இருந்து வெளியே வந்த ஜானசார தேரர் . .!

Maash