பிரதான செய்திகள்

காலி முகத்திடல் இளைஞர்களுக்கு மஹிந்த அழைப்பு! நான் பேச தயார்

காலி முகத்திடலில் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் இளைஞர்களுடன் பேச்சு நடத்துவதற்கு அரசு தயாராகவே இருக்கின்றது என்று பிரதமர் மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

” இளைஞர்கள் முன்வந்தால் அவர்களுடன் நானே நேரில் பேச்சு நடத்துவதற்கு தயாராக உள்ளேன்.” – என்று மஹிந்த ராஜபக்ச இன்று அறிவிப்பு விடுத்துள்ளார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான அரசு பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி காலி முகத்திடலில் இளைஞர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர். இன்று ஐந்தாவது நாளாகவும் போராட்டம் தொடர்கின்றது.

இந்நிலையிலேயே பிரதமர் மஹிந்த ராஜபக்ச அழைப்பு விடுத்துள்ளார்.

Related posts

கல்குடா தொகுதி கல்வியினை சீரழிக்க முதலமைச்சர் முற்படுகின்றார்- அமீர் அலி குற்றசாட்டு

wpengine

இலங்கையின் முதல் விந்தணு வங்கி கொழும்பில் உள்ள காசல் மகப்பேற்று மருத்துவமனையில்..!

Maash

வவுனியாவில் 21 வயது இளைஞரின் சடலம் மீட்பு!

Editor