பிரதான செய்திகள்பிராந்திய செய்தி

உள்ளூர் உற்பத்திகளை அதிகரிக்க மன்னார் அரசாங்க அதிபர் விஷேட நடவடிக்கை

.

மன்னார் ஹற்றன் நஷனல் வங்கியினால் இலத்திரனியல் கொடுப்பனவை ஊக்குவிக்கும் வகையிலும், உள்ளூர் உற்பத்திப் பொருட்களை சந்தைப்படுத்தும் வகையிலும் மன்னார் பஜார் பகுதியில் இன்று புதன்கிழமை (16) காலை ‘புத்தாண்டு சந்தை’ மற்றும் விற்பனை இடம் பெற்றது.

இதன் போது மன்னார் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் அனைத்து விதமான உள்ளூர் உற்பத்தி பொருட்களும் கண்காட்சிக்கு வைக்கப்பட்டதோடு, மலிவு விற்பனையும் இடம் பெற்றது.

குறித்த புத்தாண்டு சந்தை கண்காட்சி மற்றும் விற்பனையின் போது பெண் தலைமைத்துவ குடும்ப பெண்களும் அதிக அளவில் தமது உற்பத்தி பொருட்களை காட்சிப்படு;ததியதோடு,விற்பனையும் இடம் பெற்றது.

பொருட்களை கொள்வனவு செய்கின்றவர்கள் கொடுப்பனவை இலத்திரனியல் ஊடாக வங்கிக்கு பரிமாற்றம் செய்ய நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டது.


குறித்த நிகழ்வில் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஏ.ஸ்ரான்வி டி மெல் , மன்னார் ஹற்றன் நஷனல் வங்கியின் பிராந்திய முகாமையாளர் (விற்பனை) விற்பனை ரி.நிஷாந்தன் மற்றும் வங்கி பிரதிநிதிகள் ஆகியோர் கலந்து கொண்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

அஸ்கிரிய பீடாதீபதிகளை சந்தித்த மேல் மாகாண அளுநர்

wpengine

ரவூப் ஹக்கீம் முஸ்லிம் மக்களுக்காக எந்தவொரு நடவடிக்கையையும் முன்னெடுக்கவில்லை

wpengine

எருக்கலம்பிட்டி, முஸ்லிம் மத்திய மகா வித்தியாலயத்தின் பவள விழா

wpengine