பிரதான செய்திகள்

இலங்கையில் அலுவலக நேரத்தில் மாற்றம் செய்ய வேண்டுமா? நாளை தீர்மானம்

இலங்கையில் அலுவலக நேரத்தில் மாற்றம் செய்ய வேண்டுமா என்பது தொடர்பில் தேசிய தொழிலாளர் ஆலோசனை சபையில் நாளை கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளது.

தொழில் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா இந்த விடயத்தை தெரிவித்துள்ளார். போக்குவரத்து நெரிசலை குறைக்கும் நடவடிக்கையாக அலுவலக நேரத்தை திருத்துவது குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

ஊழியர் சேமலாப நிதியத்தின் 30 வீதத்தை பெற்றுக்கொள்வதில் அங்கத்தவர்கள் பின்பற்ற வேண்டிய நடைமுறையை இலகுபடுத்தவும் நடவடிக்கை எடுக்கப்படும் என தொழில் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா கூறியுள்ளார்.

Related posts

விமல் வீரவன்ச இன்று நீதிமன்றத்தில் முன்னிலை ஆவாரா?

wpengine

ரஷ்யா- உக்ரைன் பேச்சு! ரஷ்யா உயிரை காப்பாற்றிக்கொள்ளுங்கள் ஜெலன்ஸ்கி எச்சரிக்கை

wpengine

நிச்சயமற்ற உலகின் தன்மையால், வழமைக்கு திரும்பும் இலங்கையின் பொருளாதாரத்தை மதிப்பிட காலம் தேவை .

Maash