பிரதான செய்திகள்பிராந்திய செய்தி

வடக்கில் பால் உற்பத்தியை அதிகரிக்க 3.5 மில்லியன்! சதொச ஊடாக பொருற்கள்

வடக்கு மாகாணத்தில் பணியாளர்களின் பால் உற்பத்தியை ஊக்குவிப்பதற்காக ஒரு கால்நடை அலுவலகத்திற்கு சுமார் 3.5 மில்லியன் ரூபா ஒதுக்கப்படவுள்ளதாக வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா தெரிவித்தார்.

,இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,

இலங்கையின் பால் உற்பத்தியில் வடக்கு மாகாணம் காத்திரமான இடத்தை வகிக்கின்ற நிலையில் அதனை மேலும் விருத்தி செய்யும் நோக்குடன் மத்திய அரசினால் சுமார் 90 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.

வடக்கு மாகாணத்தில் உள்ள 34 கால்நடை வைத்திய அதிகாரி பணிமனைகளை உள்ளடக்கி குறித்த திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது.

வடக்கில் சதோச விற்பனை நிலையத்தின் ஏற்பாடுகளை அதிகரிப்பதற்காக கலந்துரையாடல்கள் இடம்பெற்று வருகின்றது.

ஆகவே மாகாணம் முழுவதும் அத்தியாவசியப் பொருட்களை சதோச விலையில் பெறக்கூடிய வகையில் விநியோகம் செய்ய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என அவர் மேலும் தெரிவித்தார்.

Related posts

தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் இராஜினாமா

wpengine

அரசியல்வாதிகள், உலமாக்கள், செல்வந்தர்கள் சமுதாய நலனுக்காக ஒரே நேர்கோட்டில் பயணிக்க வேண்டும்-றிஷாட்

wpengine

குவைத் மன்னருக்கு இரங்கல் தெரிவித்த முன்னால் அமைச்சர் றிஷாட்

wpengine