பிரதான செய்திகள்

க.பொ.த உயர்தரப் பரீட்சை நாளை (07) ஆரம்பமாகவுள்ளது.

இந்த வருடத்திற்கான க.பொ.த உயர்தரப் பரீட்சை நாளை (07) ஆரம்பமாகவுள்ளது.

இதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் பரீட்சை நிலைய பொறுப்பதிகாரிகள், பொலிஸார், முப்படையினர் மற்றும் சுகாதார திணைக்களம் முன்னெடுத்துள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் எல்.எம்.டி.தர்மசேன தெரிவித்துள்ளார்.

நாளை முதல் அடுத்த மாதம் 5 ஆம் திகதி வரை பரீட்சை நடைபெற உள்ளது.

இந்த ஆண்டு க.பொ.த உயர்தரப் பரீட்சைக்கு 2,438 நிலையங்களில் மொத்தம் 345,242 மாணவர்கள் தோற்றவுள்ளனர்.

கொரோனா தொற்றுக்குள்ளான மற்றும் தனிமைப்படுத்தப்பட்ட விண்ணப்பதாரர்களுக்காக 29 சிறப்பு மையங்களில் பரீட்சை நடத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

ஹக்கீம் தன்னை குற்றமற்றவர் என நிரூபித்தாரா?

wpengine

‘பொருட்களுக்கான இறக்குமதியை தடை செய்து, மாபியாக்காரர்களுக்கு இலாபமீட்ட வழி ஏற்படுத்திக்கொடுத்துள்ள அரசு’

Editor

தினமும் நான்கு மணித்தியாலங்கள் மின் துண்டிப்பு

wpengine