பிரதான செய்திகள்பிராந்திய செய்தி

நீதிக்கான அணுகல் நடமாடும் சேவை விழிப்புர்வூட்டும் வேலைத்திட்டம் மன்னாரில்

மேன்மை தங்கிய ஜனாதிபதி அவர்களின் “சுபீட்சத்தின் நோக்கு” கொள்கை பிரகடனத்துக்கு அமைவாக நீதிக்கான சமத்துவமான அணுகல்களை ஊக்குவிப்பதற்கு நாட்டுமக்கள் மத்தியில் நல்லிணக்கம் மற்றும் தேசிய ஒருமைப்பாட்டினை மேம்படுத்தும் நோக்கில் குறைந்த வருமானங்களை கொண்ட மக்களுக்கு சட்ட ஆலோசனைகள் மற்றும் சட்ட ஆவணங்களை வழங்குவதற்காக நீதி அமைச்சின் ஏற்பாட்டில் நீதிக்கான அணுகல் எனும் தொனிப்பொருளில் மன்னார் மாவட்ட மக்களுக்கான நடமாடும் சேவை மற்றும் அரச ஊழியர்களுக்கு விழிப்புணர்வூட்டும் வேலைத்திட்டம் இன்று(27) மன்னார் மாவட்டச் செயலகத்தில் இடம்பெற்றது.

குறித்த நிகழ்வில் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி.நந்தினி ஸ்ரான்லி டிமெல், மேலதிக அரசாங்க அதிபர் எஸ்.குணபாலன், நீதி அமைச்சின் சட்ட பிரிவின் உதவி செயலாளர் திருமதி இமாலி கொத்தலாவ, சமூர்த்தி பணிப்பாளர், பிரதேச செயலாளர்கள், உதவி மாவட்ட செயலாளர், சட்ட அதிகாரிகள், நீதி அமைச்சின் அதிகாரிகள், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், கிராம உத்தியோகத்தர்கள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.

Related posts

காதலி பார்க்கும் போதே! காதலன் தற்கொலை (விடியோ)

wpengine

சமுர்த்தி வங்கியினை நான் விடமாட்டேன்! கொள்ளையடித்தவர்களின் கையில் சிக்கினால்

wpengine

இந்த இளைஞனின் நிலைகண்டு உதவி கரம் நீட்டுவோம்!

wpengine